செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிகாரத்தைத் தந்தால் பிரச்சினையை நாமே தீர்ப்போம்! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

அதிகாரத்தைத் தந்தால் பிரச்சினையை நாமே தீர்ப்போம்! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

1 minutes read

எமக்கான அதிகாரங்கள் எமது கைகளில் தரப்பட்டால் மாத்திரமே எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலைக் கோருகின்றார்கள்.

உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாகப் பல பிரச்சினைகளை முன்வைத்திருந்தாலும் இதுவரை அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் அதிகூடிய மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேலண்டும். உரிய துறைக்கு ஒரு தமிழரே அமைச்சராக இருக்கின்றார்.

எனவே, ஒரு அமைச்சரவை அந்தஸ்து இருந்தும்கூட இதுவரை தீர்வுகள் பெறப்படவில்லை என்பதால்தான் நாங்கள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் எமக்கான அதிகாரங்களைக் கோருகின்றோம். எமது கரங்களில் அதிகாரங்கள் தரப்பட்டால் நாமே எமது பிரச்சினைகளைப் பார்த்துக்கொள்ள முடியும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More