செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு – மக்கள் கவலை

கிளிநொச்சியில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு – மக்கள் கவலை

1 minutes read

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்ட விரோத மணல் அகழ்வுக் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கைமீறிச் செல்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான சட்ட விரோத மணல் அகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும்,  குறிப்பாக, கடலுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் அதிகமாக சட்ட விரோத அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் முழுக் கிராமமும் பாதிக்கப்படுகின்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த தவறினால், தமது ஊர்களை தாம் இழந்துவிட நேரிடும் எனவும் கவலையோடு கூறியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்லாறு, உமையாள்புரம் விளாவோடை, தட்டுவன்கொட்டி, இரணைமடு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், ஊரியான், முரசுமோட்டை, பெரியகுளம், கிளாலி உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களின் விபரங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினால், அன்றிரவே தங்கள் வீடுகள் தாக்கப்படும் அல்லது தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்பது போன்ற  அச்சுறுத்தல்களையும் அந்த மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் காரணமாகவே பொது மக்களாகிய நாம் அமைதி காக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல தடவைகள் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும், சட்ட விரோத அகழ்வு சார்ந்து மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு பல தடவைகள்  கொண்டு சென்றபோதும் இதுவரை யாராலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கும் பொது மக்கள், சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களில் பலர் அரசியல் தரப்புகளின் செல்வாக்குள்ளவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More