செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சு.கவுக்குள் முரண்பாடு இல்லை! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

சு.கவுக்குள் முரண்பாடு இல்லை! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

0 minutes read

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நாளை (03) நடைபெறுகின்றது. இதன்போது பதவி நிலையில் எவ்வித மாற்றமும் வராது. அது தொடர்பில் கட்சியின் நிறைவேற்றுக்குழுதான் தீர்மானம் எடுக்கும்.

கட்சிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. ஒற்றுமையாகவே இருக்கின்றோம். பிளவு என்பது உருவாக்கப்பட்ட கதையாகும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More