செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வீட்டிலிருந்து பொருட்களைத் திருடியவர் சிக்கினார்!

யாழில் வீட்டிலிருந்து பொருட்களைத் திருடியவர் சிக்கினார்!

0 minutes read

புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வீட்டில் இருந்து 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்று புனரமைக்கப்பட்டு வருகின்றது. அந்நிலையில் வீட்டில் புதிதாகப் பொருத்துவதற்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த குளியலறைப் பொருட்கள் உள்ளிட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரால் திருடப்பட்ட குளியலறைப் பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More