செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் வெட்டி படுகொலை | சந்தேக நபர் தலைமறைவு

காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் வெட்டி படுகொலை | சந்தேக நபர் தலைமறைவு

1 minutes read

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே பலத்த வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தோடு தொடர்புடைய கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காணி பிரச்சினயால் ஏற்பட்ட முரண்பாட்டினாலே நேற்று சனிக்கிழமை (09) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள தாகவும் இவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிசார் மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

வெட்டு காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ள நபரின் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற் கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More