செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

1 minutes read

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கானஇலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக  தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 54 அமர்வின் ஆரம்பத்தில்நேற்று இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை சந்தேகத்திற்குரிய ஆணை என வர்ணித்துள்ள அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழிவகுத்தஇரண்டு 46.ஃ1 -51.ஃ1 தீர்மானங்களையும் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என்பதை நான்ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன்.எழுத்துமூல அறிக்கைகளையும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் நாங்கள்நிராகரிக்கின்றோம்.

இந்த தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களைஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில்வாக்களிப்பதைதவிர்த்தன  என்பதை நாங்கள் மீண்டும்நினைவுபடுத்தவிரும்புகின்றோம்.குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை  அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை.ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமைமுன்னொருபோதும் இடம்பெறாத விடயம்.

இது மனித உரிமைபேரவையின் உறுப்பு நாடுகள் பேரவைக்கு வழங்கிய ஆணைக்குஅப்பால் செல்கின்றது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.இந்த தீர்மானங்கள் உள்விவகாரங்களில் தலையிடுபவை சமூகங்களைதுருவமயப்படுத்துபவவை.

மேலும் இந்த தீர்மானங்களை மனித உரிமைகளிற்கு அப்பாற்பட்டகாரணங்களிற்காகவும் தங்களின் உள்நாட்டு அரசியலுக்காகவும்  ஒருசில நாடுகள் பின்பற்றுகின்றனஇந்த தீர்மானத்தின் நிதிசார்ந்த தாக்கங்கள் குறித்து பல நாடுகள்கேள்வி எழுப்பியுள்ளனஇது பேரவையினதும் உறுப்புநாடுகளினதும்வளங்கள் மீது பயனற்றவிதத்தில் செலவுகளை உருவாக்ககூடியது என்பதைஇலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது.எனினும் பல்தரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்றநாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில்கொண்டும்.இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும்பேணும

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More