செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இவ்வருடம் இதுவரை 75 துப்பாக்கிச்சூடுகள்! – 42 பேர் பலி

இவ்வருடம் இதுவரை 75 துப்பாக்கிச்சூடுகள்! – 42 பேர் பலி

0 minutes read

நாடு முழுவதும் இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்று வரையான காலப் பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இதன்போது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்களில் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வருடத்தின் முதல் சில மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More