செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொலைக் குற்றவாளிகள் 8 பேருக்கு மரணதண்டனை!

கொலைக் குற்றவாளிகள் 8 பேருக்கு மரணதண்டனை!

0 minutes read

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 8 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் களுத்துறை தெற்கு கலில் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 8 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரணதண்டனையை விதித்துள்ளார்.

8 குற்றவாளிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

சுமார் 20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More