செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் வீடு புகுந்து தாக்குதல்! – ஐவர் படுகாயம்

கிளிநொச்சியில் வீடு புகுந்து தாக்குதல்! – ஐவர் படுகாயம்

1 minutes read

 

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த குழுவொன்று சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

20 இற்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாகத் தாக்குதல் மேற்கொண்டதுடன், அங்கிருந்தவர்களைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் காயப்படுத்தியும் உள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் குழுவினர் சிசிரிவி கமராக்கள், மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றைத் தாக்கி அழித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கிய பின் அதனை எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின்போது பெற்றோல் குண்டும் வீசப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வெட்டுக் காயங்களுக்குள்ளான நால்வர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரும் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையைக் கழிப்பதற்காக தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவரின் வீட்டிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாட்டுப் பிரஜைக்கும், அவரது மனைவிக்கும் தாக்குதலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி குற்றத் தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அடையாளம் காணப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரணைமடுக் குளத்தின் கீழ் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கத் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினர் பல முயற்சிகளை எடுத்திருந்தனர்.

தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மணல் மாபியாக்களே அதிகம் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாகத் தடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More