செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எம்.பி. பதவியை இழக்கின்றார் நஸீர்! – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

எம்.பி. பதவியை இழக்கின்றார் நஸீர்! – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

1 minutes read

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் நஸீர் அஹமட், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்த நீக்கலுக்கு எதிராக நஸீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் அக்கட்சியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More