செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலைப் பிற்போடும் திட்டம் அரசுக்கு இல்லையாம்!

தேர்தலைப் பிற்போடும் திட்டம் அரசுக்கு இல்லையாம்!

0 minutes read

எந்தத் தேர்தலையும் பிற்போட அரசு முயற்சிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தேர்தலைப் பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. காரணத்தின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.

அடுத்த தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.

நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர். எதிரணிகளின் அரசியல் நாடகம் மக்களுக்குத் தெளிவாக புரியும்.

கிராம மட்டத்தில் தற்போது கூட்டங்களை நடத்தி வருகின்றோம். எமது பலம் என்னவென்பதை ஜே.வி.பியினர் அங்கு வந்து பார்க்கலாம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More