செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முகமாலை பகுதியில் விசமிகளால் வீடு சேதம் | சொத்துக்கள் நாசம்

முகமாலை பகுதியில் விசமிகளால் வீடு சேதம் | சொத்துக்கள் நாசம்

0 minutes read

முகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 45 நாட்களுக்கு முன்னர் வன்முறை சம்பவம் ஒன்ற இடம் பெற்றிருந்ததாகவும் அதில் ஒருவர் மரணம் அடைந்திருந்ததாகவும், அவரது   45 ஆம் நாள் நினைவு நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த வன்முறைச்ச சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரது  வீடு மீதே நேற்றிரவு  தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதேவேளை  கடந்த 45 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பலர் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More