செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெரியம்மாவைச் சுட்டுக்கொன்ற பெறாமகன்! – இலங்கையில் கொடூரம்

பெரியம்மாவைச் சுட்டுக்கொன்ற பெறாமகன்! – இலங்கையில் கொடூரம்

0 minutes read

குடும்பப் பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் மாவட்டம், இராஜாங்கனைப் பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயாரான 54 வயதுடைய ஆர். டயானா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டில் வைத்து உள்நாட்டுத் துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது இளைய சகோதரியின் 23 வயது மகனைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

காணிப் பிரச்சினை காரணமாகத் தனது பெரியம்மாவைச் சந்தேகநபர் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More