செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை!

தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை!

0 minutes read
இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலை முன்பாக நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற மோதலிலேயே குறித்த இளைஞர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிரேட் வெஸ்டன் பகுதியைச் சேர்ந்த சிவஞானம் சஜீவன் எனும் 22 வயதுடைய நபரே கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More