செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொடிகளை அறுத்து எறிந்த பொலிஸார்! – தரவை துயிலும் இல்லத்தில் அராஜகம்

கொடிகளை அறுத்து எறிந்த பொலிஸார்! – தரவை துயிலும் இல்லத்தில் அராஜகம்

1 minutes read
மட்டக்களப்பு – தரவை மாவீரர் துயிலும் இல்லத்துக்குள் புகுந்து பொலிஸார் அராஜகம் புரிந்துள்ளனர்.

மாவீரர்களை நினைவுகூர்ந்து வடக்கு – கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தநிலையில், மட்டக்களப்பு – தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் அஞ்சலி நிகழ்வின் இடையே உட்புகுந்த பொலிஸார் அஞ்சலி நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இதன்போது அங்கு ஒன்றுதிரண்டிருந்த மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், செ.கஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

துயிலுல் இல்லத்துக்குள் சப்பாத்துக் கால்களுடன் வந்திருந்த பொலிஸார், அங்கு கட்டப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்ததுடன், தீபங்களையும் பிடுங்கி எறிந்தனர்.

பொலிஸாரின் இந்த அராஜகச் செயற்பாட்டை எதிர்த்து மக்கள் கூக்குரலிட்டபோதும், நிகழ்வைக் குழப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

எனினும், பொலிஸாரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More