செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ராஜபக்ச கும்பலுக்குக் கூண்டோடு முடிவு கட்ட வேண்டும்! – சந்திரிகா வலியுறுத்து

ராஜபக்ச கும்பலுக்குக் கூண்டோடு முடிவு கட்ட வேண்டும்! – சந்திரிகா வலியுறுத்து

0 minutes read

நாட்டைச் சீரழித்த ராஜபக்ச கும்பல் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு மக்கள் எவரும் இடமளிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி நாட்டைச் சீரழித்தவர்கள் ராஜபக்சக்களே. இதனை உயர்நீதிமன்றமும் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, இப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களின் சகாக்களும் மீண்டும் நாடாளுமன்றம் வர நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ராஜபக்ச கும்பலுக்கு நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும். அவர்களைக் கூண்டோடு தோற்கடிக்க வேண்டும். அவர்களின் அரசியல் அத்தியாயம் இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More