செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை வேன் சாரதியால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

பாடசாலை வேன் சாரதியால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

1 minutes read

மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பாணமுரே பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய  பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பாடசாலை வேன் சாரதியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மாணவியின் குடும்பத்தினர்  எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த மாணவி பாடசாலைக்கு வராமல் பாடசாலை சீருடையில் எம்பிலிப்பிட்டியவில் இருப்பதை கண்ட நபரொருவர் அவதானித்து பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் குறித்த மாணவியின் வீட்டுக்கு அறிவித்ததையடுத்து, வீட்டார் இது குறித்து எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தான் புத்தகம் வாங்குவதற்காக கடையொன்றிற்கு சென்ற பின்னர், வேனில்  அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

குறித்த வேன் பாணமுரே பொலிஸ் காலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,   வான சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பாணமுரே பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More