செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லொறி மோதி தாதி பரிதாப மரணம்!

லொறி மோதி தாதி பரிதாப மரணம்!

1 minutes read
பணி முடிந்து கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதி மீது சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற லொறி மோதி விபத்துக்குள்ளாகியதில் அவர் உயிரிழந்தார் என்று பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை, ஜாலியகொட விஜய மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷா கிரிஷாந்தி லியனகே என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே விபத்தில் சாவடைந்தார்.

வார்டு எண் 11 இன் தலைமை செவிலியராக அவர் பணிபுரிந்தார். இந்த விபத்தில் அவரது கணவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

உயிரிழந்த தாதியின் கணவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தொழில்நுட்ப முகாமையாளராகக்  கடமையாற்றுகின்றார் என்றும், பணியை முடித்துக் கொண்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் சென்று மனைவியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர் சென்றிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More