செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!  

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!  

1 minutes read

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கக் காரியாலயத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டோர் காணாமல்போன தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது உறவுகள் எங்களுடன் கொஞ்சக் காலம் என்றாலும் வாழ வேண்டும் என்று தொடர்ச்சியாக நாம் போராடி வருகின்றோம்.

எமது போராட்டத்தை இதுவரையில் அரசு கவனத்தில் கொள்ளாத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம்.

நீதிக்கான எமது போராட்டம் ஆயிரக்கணக்கான பேருடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்போது நலிவடைந்து போய் பல தாய்மாரின் உயிர்கள் பறிபோனமை மட்டுமே மிகுதி.” – என்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More