செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹரின், மனுஷவின் எம்.பி. பதவி ‘அவுட்’

ஹரின், மனுஷவின் எம்.பி. பதவி ‘அவுட்’

1 minutes read
அரசு பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரைக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்ட ரீதியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக இருவரும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.

மேற்படி இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கு ஆதரவளித்தனர்.

இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், விரான் கொரயா, ஜபதி விக்கிரமரத்தன மற்றும் சட்டத்தரணிகள் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா, சம்பத் விஜயவர்தன ஆகியோர் முன்னிலையாகி வாதிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளனர்.

இதையடுத்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More