செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய தமிழரசு!

உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய தமிழரசு!

1 minutes read
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களும் அங்கத்தவர்களும் மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டும் என்று இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றது.

கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மீது கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் –
தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களோடு தொடர்ந்து பேசுவதற்குக் கட்சி தீர்மானித்திருப்பதையும் –
பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னர் அவை யாவற்றையும் பரிசீலித்து ஒரு முடிவை எடுக்கும் தீர்மானத்தில் கட்சி இருப்பதையும் கவனத்தில் கொண்டு, பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு கட்சியின் பிரமுகர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மத்திய குழு அறிவுறுத்தல் வழங்கும் தீர்மானத்தை இன்று எடுத்திருக்கின்றது.

– இந்தத் தகவலை இன்று மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More