செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது “கங்காரு”

வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது “கங்காரு”

0 minutes read

வவுனியா மாவட்டத்தின் 5 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இலங்கைத் தொழிலாளர் கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தொழிலாளர் கட்சி கங்காரு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை கட்சி முக்கியஸ்தர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More