செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள்

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள்

1 minutes read

ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை  குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023.12.31 ஆம் திகதி  வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன், தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 பேரை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த்தியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை  அரசுடமையாக்குவது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை  முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்  இன்றைய தினம்  மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ஹோகந்தர பகுதியில் உள்ள  தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் சோதனையிட்ட போது   வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 795 மதுபான போத்தல்கள், 214 வைன் போத்தல்கள் உட்பட  1009 மதுபான போத்தல்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் இரண்டு ஆப்பிள்  வகையான ஸ்மார்ட் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More