வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது.
வவுனியா வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம், யாழ். வீதியை அடைந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால் சென்று மணிக்கூட்டுக் கோபுர சந்தி ஊடாக பசார் வீதியை அடைந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வைத்தியசாலையைச் சென்றடைந்தது.
இதன்போது காசநோயைக் கட்டுப்டுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் வைத்தியர்கள், தாதியர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோக்கள் கலந்துகொண்டன.