4
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவரகொட்டுவ பிரதேசத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயது மதிக்கத்தக்க 5 அடி 7 அங்குலம் உயரமுடைய நபரே நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.