செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் ஆசிரியரைத் தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது!

யாழில் ஆசிரியரைத் தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது!

0 minutes read

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின்போது, தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்குத் துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்று திங்கட்கிழமை அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் தாக்குதலை நடத்தியவர் ஆஜராகவில்லை என்பதுடன் அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More