புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்

1 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில்,  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,  இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்  வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More