செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிள்ளையான் கைது!

பிள்ளையான் கைது!

1 minutes read
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான அவர், மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு இன்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More