பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை, ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.