யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதகல் பகுதியில் போதைப்பொருள் வியாபாரக் கும்பல் ஒன்று, கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றில் இருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அந்த வீட்டை இளவாலைப் பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தினர்.
அதன்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு வாள்கள் மீட்கப்பட்டன. தொடர் தேடுதலின்போது, பிறிதொரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டன.
அதனையடுத்து வீட்டில் இருந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.