தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை வடக்கு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை வடக்கு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.