2
நல்லை ஆதீன குரு முதல்வரின் நினைவுப் பிரார்த்தனை வைபவமும் அஸ்தி பிரதிஷ்டை நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
ஸ்நபன அபிஷேகம் முத்தமிழ்க்குருமணி நா.சர்வேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
சித்தாந்த பண்டிதர் கு.ஜெகதீஸ்வரக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நல்லை ஆதீன முதல்வரின் அஸ்தி பிரதிஷ்டை நிகழ்வு கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.