செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யோஷித, டெய்சி பாட்டிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜூலை 11 இல்!

யோஷித, டெய்சி பாட்டிக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜூலை 11 இல்!

0 minutes read

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் இந்த மனு தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைத்திருந்தார்.

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ்ஸினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைக் கருத்தில்கொண்ட நீதிவான் இந்த மனு எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More