செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி!

1 minutes read

மிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும்பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இருப்பினும் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி தாமதமானது இந்நிலையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More