செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க, தாய்வானின் வலுவான உறவும் சீனாவின் போர் எச்சரிக்கையும்

அமெரிக்க, தாய்வானின் வலுவான உறவும் சீனாவின் போர் எச்சரிக்கையும்

1 minutes read

அமெரிக்காவும் தாய்வானும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வருவதால், சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு சுதந்திரத்தை விரும்பும் மக்களை எச்சரித்துள்ளது.

மேலும் “தாய்வான் சுதந்திரம்” தேடுவது என்பது போரைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பட்டுள்ளது.

ஜனவரி 28 அன்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வு கியான், “நெருப்புடன் விளையாடுபவர்கள் தங்களைத் தீ வைத்துக் கொள்வார்கள், தாய்வான் சுதந்திரத்தினைத் தேடுவது போரைத் தவிர வேறில்லை” என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

சீனாவின் அரச ஊடகமான தி குளோபல் டைம்ஸின் ஒரு கட்டுரையில், தாய்வானின் “பிரதான நில விவகார சபையானது” தாய்வானின் அடிமட்டத்தை வேண்டுமென்றே தூண்டுவதாகவும் எந்தவொரு நிலப்பரப்பின் மீதான சொற்களும் செயல்களும் பிரதான நிலப்பகுதி தாங்க முடியாத தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரித்துள்ளது.

அதுமட்டுமன்றி அக்கட்டுரையில், தாய்வானின் ஜனநாயக முற்போக்குக் கட்சி (டிபிபி) அச்சமில்லாதவாறு நடிக்கின்றார்கள்.அவர்கள் அத்தகைய நடிக்கும் செயல்திறனைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் நாட்டைப் பிளவு படுத்துவதற்கே விளைகின்றார்கள்.

எச்சரிக்கைகளுக்கு அமைவாக அவர்களின்செயற்பாடுகளை நிறுத்தாது விட்டால் பிறிதொரு ‘பலத்தால்’ அவர்கள் அகற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More