அமெரிக்காவின் மேற்கு மத்திய மிச்சிகனில் நியூவேகோ என்ற பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வீட்டில் உருவாக்கிய வெடிகுண்டை தற்செயலாக பள்ளி மாணவன் ஒருவன் வெடிக்க செய்துள்ளான்.
முதற்கட்ட விசாரணையில் 16 வயது மாணவன் வீட்டில் தயாரித்த வெடிகுண்டை பள்ளிக்கு கொண்டு வந்ததும், பின்னர் அதனை வெடிக்க செய்ததும் தெரிய வந்துள்ளது என மிச்சிகன் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் மாணவன் மற்றும் அவனது சக வகுப்பு மாணவர்கள் 4 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவசரகால சேவை அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து மாணவர்களை பள்ளியில் இருந்து அப்புறப்படுத்தினர். வேறு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வகுப்பில் உள்ளனவா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர்.