செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் கொவிட் தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை!

அமெரிக்காவில் கொவிட் தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை!

1 minutes read

அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவி வருவதால் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்களின் தொற்றுநோயால் மோசமடைந்தது.

எனினும், தடுப்பூசி போட மறுப்பவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். பண ஊக்கத்தொகை ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு நியாயமற்றதாக தோன்றலாம், ஆனால் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்தால் நாம் அனைவரும் பயனடைவோம்’ என கூறினார்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளையும் அவர் அறிவித்துள்ளார். இதன்படி அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் இதுவரை பாதிக்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன.

ஊக்கத்தொகைகளுக்கு நிதியளிப்பதற்காக மாநிலங்கள் 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள், அமெரிக்க மீட்பு திட்ட சட்டத்திலிருந்து பணத்தை பயன்படுத்தும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More