செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சட்டமன்ற தேர்தல் : தி.மு.கவின் நேர்காணல் இன்று!

சட்டமன்ற தேர்தல் : தி.மு.கவின் நேர்காணல் இன்று!

1 minutes read

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேர்காணலை செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி குறித்த நேர்காணலில் கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு, தூத்துக்குடி வடக்கு- தெற்கு, திருநெல்வேலி கிழக்கு- மத்திய தொகுதி, தென்காசி வடக்கு-தெற்கு மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

திமுகவின் விருப்ப மனு கடந்த 17ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. 7 ஆயிரத்து 967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இவர்களுள் சுமார் 7 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் சுமார் 1400 பேர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More