0
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 37 தமிழக மீனவர்களை, விடுதலை செய்ய மன்னார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக, கடந்த மாதம் 29ம் தேதி 17ம் மீனவர்களும், இம்மாதம் 6ம் தேதி 20 மீனவர்களும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்களை விடுதலை செய்ய மன்னார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது