செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு!

1 minutes read

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,95,716 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை ஒரே நாளில் 1,206 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,07,145 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,99,33,538 பேர் மீண்டுள்ளதுடன் 4,55,033 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More