செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ராஜுவ் காந்தியின் கொலை-ஏழுபேரின் விடுதலை குறித்து நடவடிக்கை!

ராஜுவ் காந்தியின் கொலை-ஏழுபேரின் விடுதலை குறித்து நடவடிக்கை!

0 minutes read

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசியப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஏழுபேரின் விடுதலை விவகாரத்தில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், மேகதாது விவகாரம் குறித்து பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More