0
ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால், மீண்டும் விமானத்தை இயக்குவதற்கு கனடா அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி – டொரொன்டோ இடையே ஏர் இந்தியா, ஏர் கனடா விமானங்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.