செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கனமழை எச்சரிக்கை : பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

இந்தியாவில் கனமழை எச்சரிக்கை : பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

0 minutes read

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து கடலோர பகுதிகளில் மட்டும் பலத்த காற்று வீசி வருகிறது.

அதேநேரம் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைகால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More