செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!

தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!

1 minutes read

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து, யாழ்.மாவட்ட மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டகாரர்கள் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழி மறித்து சில மணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.

இந்நிலையிலேயே, போராட்டக்காரர்களை நேரில் சந்தித்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More