செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அதிபர் பதவிக்கு 19 பேர் போட்டா போட்டிஇலங்கை அதிபர் பதவிக்கு 19 பேர் போட்டா போட்டி

இலங்கை அதிபர் பதவிக்கு 19 பேர் போட்டா போட்டிஇலங்கை அதிபர் பதவிக்கு 19 பேர் போட்டா போட்டி

1 minutes read

வரும் ஜன., 8ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட, 19 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை அதிபராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட, ராஜபக் ஷேவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், தற்போதைய சூழலை பயன்படுத்தி, மூன்றாவது முறையாக அதிபர் பதவியை கைப்பற்றும் நோக்கில், கடந்த நவம்பர் மாதம்,ராஜபக் ஷே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையே, சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த, மைத்ரிபாலா ஸ்ரீசேனா, கருத்து வேறுபாடு காரணமாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியிலிருந்து விலகி, அதிபர் ராஜபக் ஷேவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு, இதுவரையில், 19 பேரிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில், மொத்தம், 1.40 கோடி பேர் வாக்களித்து, புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More