தாய்லாந்தில் பட்டத்து இளவரசராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். இவரது 3–வது மனைவி இளவரசி ஸ்ரீராஸ்மி. இவர்களுக்கு கடந்த 2001–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒருமகன் இருக்கிறார்.
இந்த நிலையில் இளவரசி ஸ்ரீராஸ்மி அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை மன்னர் பூமிபால் அதுல்யதேஜுக்கு அனுப்பினார். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து அவர் இனி அரச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. சாதாரண குடிமகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி ஸ்ரீராஸ்மியின் உறவினர்கள் 7 பேர் சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதன் எதிரொலியாக இவர் அரச குடும்பத்தில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இளவரசர் வஜ்ரலாங் கோர்ன் மன்னராகும் போது இவர் ராணி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.