செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வனத்தின் மீதொரு காதல் | முல்லையின் ஹர்வி

வனத்தின் மீதொரு காதல் | முல்லையின் ஹர்வி

0 minutes read

மர அசைவின்
இரவல் மூச்சில்
பாதை யாத்திரை

செந்தரை மண்ணில் தவழ்ந்த கொடிகள் காற்றின்
அசைவில் என்னை வதனத்தோடு அழைத்தன

வெயிலின் வேட்கைக்கு
நிழல் தந்த மரத்தின் கிளையில்
சிலந்தியின் ஊஞ்சல் கயிறு..

இலை கொப்பு மேவி
பூக்களும் காய்களும்
என் புகைப்படத்தின் காட்சிகளால்..

கீச்சிடும் பறவைகளின் இருப்பிட
அரண்மனை கூடவே
உணவும் ஊடலும்
அதன் விருப்பம் போல

கலைந்த மனதை விரட்டி
திரும்பிப் பார்க்கிறேன்

“” பிணக்குவியல்கள்””

இனப்பெருக்கம்…..
இடப்பெருக்கம்…..

வீழ்த்தப்பட்ட மரங்கள்
தோல் உரித்த மழலை குருதியில் குளித்திருப்பது போல் சாய்ந்து கிடந்தன

பசி கொண்ட தன் குஞ்சுக்கு இரையதை கௌவி
வசிப்பிடம் தேடி வந்த பறவை
வீழ்ந்த மர இடையில்
தன் குஞ்சு கிடப்பதைக் கண்டு
கலங்கி மார்படித்து
தானும் வீழ்ந்தது

வீழ்ந்த மரத்தின் பழவித்தொன்று தரை விட்டெழுந்து என்னைப் பார்த்து புன்னகைத்தது

நாளைய தலைமுறை நான்

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More