செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஊடகவியலாளரை வெளியேற்றிய பிரதேச செயலாளர்ஊடகவியலாளரை வெளியேற்றிய பிரதேச செயலாளர்

ஊடகவியலாளரை வெளியேற்றிய பிரதேச செயலாளர்ஊடகவியலாளரை வெளியேற்றிய பிரதேச செயலாளர்

0 minutes read

நாடு முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் வவுனியா பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் பாரிய குளவிக்கூடு ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு செய்திசேகரிக்கச் சென்ற செய்தியாளரை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா பொலிசாரின் உதவியுடன் பலத்காரமாக வெளியேற்றினார்.

வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா இப்பாடசாலை வாக்களிக்கும் நிலையமாக இருப்பதால் செய்தியாளரை அனுமதிக்க முடியாது எனத்தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியேற்றப்பட்ட செய்தியாளர் தெரிவிக்கையில் வவுனியா அரசாங்க அதிபரினால் தேர்தலுக்காக வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டை வைத்திருந்ததாகவும், ஆனால் கடந்த மாதத்தில் வவுனியாவில் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் இடம்பெயர்ந்த முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் தங்கியிருந்த 109 குடும்பங்களைச்சேர்ந்த 400 அங்கத்தவர்கள் சம்பந்தமான விபரங்களை வெளிக்கொணர்ந்த காரணத்தினால் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன்னை வெளியேற்றியதாக அச்செய்தியாளர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More