செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

0 minutes read

எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின் விநியோக துண்டிப்பை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபைக்கு , இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய ஏ முதல் டபிள்யு வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சி.சி. வலயங்களில் ஜூலை 2, 3 ஆம் திகதிகளை தவிர, காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

எம், என், ஓ, எக்ஸ், வை, இசெட் வலயங்களில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது  பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More