இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளராகிறார். இரண்டு புது படங்களை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
இதில் விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இன்னொரு படத்துக்கான இயக்குனர் தேர்வு நடக்கிறது. சமீப காலமாக ஏ.ஆர்.ரகுமான் கதைகள் எழுதவும் துவங்கியுள்ளார். அவர் எழுதிய கதைகளைத்தான் படமாக்க போகிறார் என்று கூறப்படுகிறது.
அத்துடன் வேறு இயக்குனர்களிடமும் கதைகள் கேட்டு வருகிறார்.
இவர் தயாரிக்கும் படத்தில் முன்னணி கதாநாயகர்கள் நடிப்பார்களா? அல்லது புதுமுக நடிகைகள் நடிப்பார்களா? என்று தெரியவில்லை. கதை மற்றும் பட்ஜெட்டுக்கு தகுந்தார்போல் நடிகர்களை தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. தற்போது பல படங்களுக்கு இசையமைத்து கொண்டு இருக்கிறார். இந்த படங்களை முடித்துவிட்டு தயாரிப்பு பணியில் இறங்க போகிறார்.